search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்.சி.சி. மாணவர்"

    • மத்திய அரசின் “புனீத் சாகர் அபியன்” திட்டத்தின் கீழ் நடந்தது
    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் கடற்கரை பகுதியை குப்பைகள் இல்லாமல் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்காக மத்திய அரசு "புனீத் சாகர் அபியன்" என்னும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

    கடற்கரையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை சேகரித்து கடற்கரையை அழகான பாதுகாப்பான சுத்தமான இடமாக மாற்று வதுடன் கடற்கரை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதன்படி நாகர்கோவில் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த என்.சி.சி. மாணவ- மாணவிகள் கன்னியா குமரியில் முக்கடலும் சங்க மிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் தூய்மை பணி யில் ஈடுபட்டனர்.

    இந்தப் பணியை கன்னி யாகுமரி சிறப்பு நிலை பேரூ ராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச் சிக்கு 11-வது தமிழ்நாடு பெட்டாலியன் என்.சி.சி. அதிகாரி கேப்டன் கே.ஆர். அஜீந்திரநாத் தலை மை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலர் தாமஸ் தி.மு.க. நிர்வாகிகள்அன்பழகன், ரூபின், ஷியாம்தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கடற்கரை தூய் மை பணியில் 70-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவ-மாண விகள் கலந்து கொண்டு கடற்கரையில் கிடந்த குப்பைகள் மற்றும் கழிவு களை அப்புறப்படுத்தி னார்கள்.

    முன்னதாகபொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணி களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக காந்தி மண்டபம் முன்பு இருந்து முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி த்துறை கடற்கரைவரை என்.சி.சி. மாணவ-மாண விகள் கடற்கரையை தூய்மை யாக வைப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பிடித்தபடி விழிப்புணர்வு பேரணி நடத்தினார்கள்.

    • மொத்தம்உள்ள 3ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 60 நாட்களில் தொடர் ஓட்டம் மூலம் கடந்து செல்கிறார்கள்.
    • இந்த ஒற்றுமை தொடர் ஓட்டத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் இன்று காலை நடந்தது.

    கன்னியாகுமரி:

    தேசிய மாணவர் படை (என்.சி.சி.) உதயமான 75-வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேசிய மாணவர் படை இயக்குனரகம் சார்பில் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை தேசிய ஒற்றுமை தொடர் ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இந்த ஒற்றுமை தொடர் ஓட்டத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் இன்று காலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள தமிழ்நாடு தேசிய மாணவர் படை துணை டைரக்டர் ஜெனரல் கமாடர் அதுல்குமார் ரஸ்டோகி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து 250-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் ஒற்றுமை தொடர் ஜோதி ஓட்டத்தை தொடங்கினர்.

    கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த தொடர் ஓட்டம் நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, சின்னாளப்பட்டி, தேத்துப்பட்டி, வேலூர், ஐதராபாத், நாக்பூர், ஆக்ரா, வழியாக வருகிற ஜனவரி மாதம் 18-ந்தேதி டெல்லி சென்றடைகிறது.மொத்தம்உள்ள 3ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 60 நாட்களில் தொடர் ஓட்டம் மூலம் கடந்து செல்கிறார்கள். கன்னியாகுமரியில் நடந்த இந்த ஒற்றுமை தொடர் ஓட்ட நிகழ்ச்சியில் தமிழக அரசின் சுற்றுலாத்துறையைச்சேர்ந்த சுற்றுலா காவலர்களும் பங்கேற்றனர்.

    ×